பூமியாய் நீ சுடுவதால்
வானமாய் நான் அழுகிறேன்
என் கண்ணீரில் நீ குளிர்வாய் என்றால்
என்றும் அழுவேன் அடை மழையாய்
என் காதலும்
உன் நிழல் போலத்தான்
என்றும் உன்னைத் தொடரும்
உனக்குத் தெரியாமல்
அழுது அழுது பாலைவனமாகி விட்டது என் நெஞ்சம்
கானல் நீராய் அதில் உன் நினைவுகள் மட்டும்
என் கண்ணீரும் உன்னைத் தான் காதலிக்கிறதோ..?
நீ என்னைப் பிரிந்தால் அது கண்ணை விட்டு
உன்னைத் தொடர்கிறது...!
அதற்கும் காதல் தோல்வி தான்... என்னைப் போல்
உன்னைச் சேராமல் மண்ணில் மறைகிறது.
No comments:
Post a Comment